மாலவி அதிபருக்கு எதிராக போராட்டம்: 18 பேர் பலி
லிலாங்வி: தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலவி நாட்டு அதிபர் பிங்குவா முதாரிகா என்பவருக்கு எதிராக போராட்டம்வெடித்துள்ளது.
லிபியா, எகிப்து உள்ளிட்ட நாட்டு அதிபர்களுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். தற்போது இந்த வரிசையில் மாலவியும் சேர்ந்துள்ளது.
மாலவி நாட்டின் அதிபரான பிங்குவா முதாரிகா கடந்த 2004-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். சிறந்த பொருளாதார நிபுணர். ஆனால் அவரது மோசமான பொருளாதாரத் திட்டங்களால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை தலைவிரித்தாடுகிறது.
இதை எதிர்த்து பாலன்டயீர் பகுதியி்ல் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் மெதுவாக நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. போராட்டக்காரர்கள் அரசியல் பிரமுகர்களின் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை குறி வைத்து கொள்ளையடித்து வருகின்றனர்.
வன்முறை மற்றும் கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இதுவரை 18 பேர் பலியாகினர். 130 பேர் காயமடைந்தனர்.
வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் வானொலியில் பேசிய அதிபர் முதாரிகா, கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அடித்து நொறுக்கினால் எரிபொருள் கிடைக்கப் போவதில்லை. வன்முறையில் ஈடுபடுவோர், பிசாசினால் ஏவப்பட்டு செயல்படுகின்றனர். எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications