Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏழை மாணவர்களுக்காக விஜயகாந்த் நடத்தும் 66 இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகாந்த் தனது அலுவலக மாடியில் சொந்த செலவில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் ஒன்றை அமைத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் அதிக அளவில் கிராமங்களே உள்ளது. குறிப்பாக இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் ஏழை, எளியவர்களாகவே உள்ளனர். இதனால் இவர்களது குழந்தைகள் நல்ல கல்வி கற்க ஏங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் ரிஷிவந்தியம் தொகுதியில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள தேமுதிக அலுவலகத்தின் மாடியில் ஏழை, எளிய மாணவர்கள் நலன் கருதி இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் ஒன்றை அமைத்துள்ளார் விஜயகாந்த்.

இதன் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் கம்ப்யூட்டர் பயிற்சி இலவசமாக பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரிஷிவந்தியம் தொகுதியில் மேலும் சில இடங்களில் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

ஏழை எளிய மாணவ, மாணவிகள் கம்ப்யூட்டர் பயிற்சி பெற தமிழகத்தில் மொத்தம் 66 இடங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது சொந்த செலவில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+