மக்களுக்காக அயராது பாடுபடுங்கள்: அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு ஜெ. உத்தரவு
கடையநல்லூர்: அதிமுக ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கு அமைச்சர்களும், எம்.எல்.ஏ. க்களும் அயராது பாடுபட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.
தமிழக கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தனது அலுவலகத்திற்கு வந்த அமைச்சர் செந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது,
முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி கடையநல்லூர் தொகுதியில் அனைத்து பணிகளும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்களுக்கு தேவைப்படக் கூடிய காரியங்களை மேற்கொள்ள நிதி பற்றாக்குறை இருந்தாலும் கூட மக்கள் நலன் கருதி அந்தப் பணிகள் தொய்வில்லாமல் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா அறிவுறித்தியுள்ளார்.
நம்பிக்கையுடன் வாக்களித்துள்ள மக்களுக்கு அல்லும், பகலும் அயராது பாடுபட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதனை ஏற்று அனைத்து பணிகளும் விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications