ரூ 1.85 லட்சத்துக்கு டபுள் பெட்ரூம் வீடு... மத்திய அரசு திட்டம்!!

இன்றைக்கு கிராமங்களில் கூட ஓரளவு வசதியான வீட்டைக் கட்டி முடிக்க ரூ 6 முதல் 8 லட்சம் வரை தேவைப்படுகிறது (இடத்துக்கான விலை தவிர்த்து). நகரங்களில் ஒரு சின்ன ஃப்ளாட்டுக்கே பல லட்சங்கள் வைக்க வேண்டிய கட்டாயம்.
செங்கல், மணல், கம்பி, சிமெண்டு என கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து ஏற்றத்தால் ஏழைகளின் சொந்தவீடு கனவு எட்டாக்கனியாகவே உள்ளது.
இருந்தாலும் அனைவருக்கும் சொந்த வீடு அவசியம் என்பதை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் வீடு கட்டி கொடுக்க மத்திய அரசின் வீடு வறுமை ஒழிப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
25 சதுர மீட்டர் நிலத்தில் 2 படுக்கை அறைகள், ஒரு சமையல் அறை, மற்றும் குளியல் அறை கொண்ட ஒரு வீட்டை ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் செலவில் கட்டிக் கொடுக்க வறுமை ஒழிப்பு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
இதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக நாம் பயன்படுத்தும் கட்டுமான பொருட்களுடன் அந்தந்த பகுதியில் கிடைக்கும் கற்கள், மூங்கில், மண், ஆகியவற்றை பயன் படுத்தி இத்தகைய குறைந்த விலை வீடுகள் கட்ட முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புதிய தொழில் நுட்ப முறையில் 20 சதவீத செலவு குறையும் என்று அவர்கள் உறுதிபட கூறினார்கள். இந்த புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உத்தர பிரதேசம் அமேதியிலும், அரியானா மாநிலம் பிஞ்சூர் பகுதியிலும் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அம்பாலா பகுதியில் இதே முறையில் சமுதாய கூடம் கட்டி முடிக்கப்பட்டதாகவும், தொழில் நுட்ப மேம்பாட்டு கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இத் திட்டம் நாடு முழுவதும் விஸ்தரிக்கப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு நிச்சயம் நனவாகிவிடும்.












Click it and Unblock the Notifications