மீண்டும் 50 புள்ளிகள் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி... காஸ்ட்லியாகும் கடன்கள்!!
டெல்லி: ரெபோ மற்றும் ரிவர்ஸ் ரெபோ வட்டி வீதங்களையும் 50 புள்ளிகள் வரை இன்று உயர்த்தியது இந்திய ரிசர்வ் வங்கி.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து வட்டிவீதத்தை உயர்த்தி வருகிறது ரிசர்வ் வங்கி. ஆனால் பல முறை இந்த உத்தியை பயன்படுத்தியும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதுவரை ஒற்றை இலக்கத்தில் இருந்த பணவீக்க அளவு இப்போது இரட்டை இலக்கத்தை நெருங்கியுள்ளது.
எனவே இம்முறை 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு தரும் கடனுக்கான வட்டி -ரெபோ ரேட் 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்கும் ரொக்க வைப்புக்கான வட்டிவீதம் - ரிவர்ஸ் ரெபோ 7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ரொக்க இருப்பு விகிதம் எனப்படும் சிஆர்ஆர் வீதத்தில் எந்த மாற்றமும் இல்லை.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி இதுவரை 11 முறை வட்டிவீதங்களை உயர்த்திக் கொண்டே வந்துள்ளது ரிசர்வ் வங்கி.
வட்டியை உயர்த்துவது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வழிதான் என்றாலும் தொடர்ந்து இதே உத்தியைப் பயன்படுத்துவது பொருளாதாரத்தை வீழ்ச்சிக்குள்ளாக்கும் என பொருளியல் நிபுணர்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போதைய வட்டி உயர்வு மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன்கள் மேலும் காஸ்ட்லியாகியுள்ளன. பல்வேறு கடன்களுக்கான வட்டிகள் கடுமையாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications