விநியோகஸ்தர்கள் தட்டுப்பாடு-தானியங்கி பால் பூத்களை மூடுகிறது ஆவின்

ஆவின் நிறுவனம் தமிழகத்தில் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த ஆவின் நிறுவனத்திற்கு, சமீப காலமாக பெயர் கெட்டு புகழ் மங்கி வருகிறது. இதற்கு போதுமான அளவு விநியோகம் இல்லாததே காரணம் என்றக் குற்றசாட்டு பரவலாக இருக்கும் நிலையில், தேவையை பூர்த்தி செய்யும் தனியார் நிறுவனங்கள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன.
இதனால், ஆவின் பால் விற்பனை குறைய ஆரம்பித்துள்ளது. 216 தானியங்கி இயந்திரங்கள் மூலம் பால் விற்பனை நடந்த வந்த சென்னையில், தற்போது 165 பால் விற்பனை மையங்கள் மட்டுமே செயல்படுகின்றன. இவற்றின் மூலம், தினமும் 26 ஆயிரத்து 381 லிட்டர் பால் விற்பனை நடக்கிறது.
இதுகுறித்து ஆவின் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், தானியங்கி பால் இயந்திரங்களை பராமரிப்பது சிரமம். பாலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும், குளிர்சாதன பெட்டிகள் அடிக்கடி பழுதாகிவிடுகிறது. இதனால், 100 லிட்டருக்கும் குறைவான விற்பனை நடைபெறும் இடங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன.
இதனால் தானியங்கி பால் இயந்திரம் மூலமான பால் விற்பனையை கமிஷன் அடிப்படையில் நடத்த கூட யாரும் முன்வருவதில்லை. குறைந்தது 400 லிட்டர் வரை விற்பனை நடக்கும் இடங்களில் மட்டுமே, தானியங்கி இயந்திரங்கள் மூலம் பால் விற்பனை நடக்கிறது.
ஆவின் பால் பாக்கெட் விற்பனையில் எந்த பிரச்சனையும் இல்லை. தற்போது சென்னை மற்றும் புறநகரில் 165 தானியங்கி இயந்திரங்கள் மூலம் பால் விற்பனை மையத்தில், 58 இடங்களில் ஆவினின் மற்ற பொருட்கள் விற்பனை நடக்கிறது, என்றார்.












Click it and Unblock the Notifications