நாகர்கோவில் அருகே கட்டிப் பிடித்தபடி இரண்டு வாலிபர்கள் தற்கொலை
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கட்டிப்பிடித்தபடி இரண்டு வாலிபர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இருவரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
நாகர்கோவில்-இரணியல் இடையேயான ரயில்வை பாதையில் ஓழுகினசேரி பகுதியில் உள்ள தண்டவளத்தில் இன்று 27ந் தேதி காலை இரு வாலிபர்கள் தலை மற்றும் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசுக்கு தகவல் வந்தது.
அங்கு ஒரு வாலிபரின் உடல் தசை நசுங்கிய நிலையில் தண்டவளத்தில் கிடந்தது. மற்றொரு வாலிபரின் தலை மற்றும் இடது கை ஆகியவை தண்டவளத்திலும், உடல் பாகங்கள் தணடவளத்திற்கு வெளியேயும் கிடந்தன.
இவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. இறந்து கிடந்த வாலிபர்கல் 25 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கும்.
ஒரு வாலிபரின் லுங்கியை வைத்து இரு வாலிபர்களும இடுப்பில் கட்டி கொண்டு ஒருவரை ஒருவர் கட்டிபிடித்தப்படி தண்டவளத்தில் விழுந்து தற்கொலை செய்து இருக்கிறார்கள். இரு வாலிபர்களின் உடல் கிடப்பது அறிந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் வந்து பார்த்தனர். ஆனால் அவர்களுக்கும் இறந்த வாலிபர்களை பற்றிய விபரம் தெரியவில்லை.
ஒரு வாலிபர்களும் ஒன்றாக கட்டிபிடித்தப்படி ரயிலில் விழுந்து தற்கொலை செய்து இருப்பதால் இவர்கள் இருவரும் நண்பர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இறந்து கிடந்தவர்கள் அருகில் இருந்து சுமார் 3 ஆயிரம் பணம், பீடி, தாயத்து போன்றவை எடுக்கப்பட்டன.
இருவரும் கட்டி பிடித்து தற்கொலை செய்ததற்கு காரணம் என்னவாக இருக்கும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.
இவர்கள் நேற்று இரவே இந்த பகுதிக்கு வந்து இருக்கலாம் என்றும், இன்று அதிகாலை கொல்லம்-மதுரை பாசஞ்சர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications