அழகிரியின் கூட்டாளி அட்டாக் பாண்டியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு

நில அபகரிப்பு உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டோரை தமிழகம் முழுவதும் காவல்துறையினர் வளைத்து வளைத்துக் கைது செய்து வருகின்றனர். மதுரையில் மு.க.அழகிரியின் நெருங்கிய கூட்டாளிகளான அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ், கோ.தளபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவர்களில் அட்டாக் பாண்டி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுரேஷ், தளபதி உள்ளிட்டோர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமையன்று பொட்டு சுரேஷ் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இதனால் அவர் ஒரு ஆண்டுக்கு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தச் சூழ்நிலையி்ல் இன்று அட்டாக் பாண்டி மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. மதுரை மாநகர காவல்துறை ஆணையர் கண்ணப்பனின் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம், அட்டாக் பாண்டியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகர் திருச்சி சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் மூலம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதியுள்ள அழகிரியன் 2வது கூட்டாளி பாண்டி ஆவர்.
அட்டாக் பாண்டி மீது நில அபகரிப்பு, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 வழக்குகள் உள்ளன. ஏற்கனவே இவர் தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது நினைவிருக்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications