வீரபாண்டி ஆறுமுகம் திடீரென மீண்டும் கைது-கோவை சிறையில் அடைப்பு, திமுகவினர் வன்முறை

கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கம்மாள் காலனி, பிரீமியர் மில் நில மோசடி வழக்குகளில் 3 நாள் அவரை காவல் நிலையத்து வைத்து விசாரிக்க அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், பின்னர் அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜாமீனில் செல்ல அனுமதிக்கலாம் என உத்தரவிட்டது.
இதையடுத்து வீரபாண்டி ஆறுமுகம் சேலம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் முன் ஆஜரானார். அவர் 3 நாட்கள் காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த ஜாமீன் நிபந்தனைப்படி சேலம் மத்திய குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் வீரபாண்டி ஆறுமுகம் தினமும் காலையில் கையெழுத்திட்டு வருகிறார்.
இன்று 3வது நாளாக கையெழுத்து போட வந்த வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் திடீரென கைது செய்தனர். கோவையில் ஒரு நில மோசடி தொடர்பாக அவரைக் கைது செய்தனர்.
நீதிமன்றங்கள் இன்று விடுமுறை என்பதால் அவரை கோவை நீதிபதி முன் ஆஜர்படுத்திவிட்டு கோவை சிறையில் அடைத்தனர்.
பேருந்துகள் உடைப்பு:
வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதற்கு, திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வீரபாண்டி ஆறுமுகத்தை அழைத்துச் சென்ற போலீஸாருடன் மோதலிலும் ஈடுபட்டனர்.
அவரது கைதுக்கு எதிராக சேலம் நகரில் ஆங்காங்கே வன்முறைகள் நடந்து வருகின்றன. சேலம் பொதுமருத்துவமனை மற்றும் பேருந்து நிலையம் எதிரில் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சேலம் நகரில் காலை முதல் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதனையடுத்து நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications