பெல்லாரியில் 49 லாரி இரும்பு தாதுக்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள்
பெல்லாரி: பெல்லாரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக 49 டிரக்குகளில் கொண்டு செல்லப்பட்ட இரும்பு தாது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெல்லாரி மாவட்டத்தில் சுரங்கப் பணிகளை உடனே நிறுத்துமாறு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மறுநாளே அலிகாரில் சட்டவிரோதமாக 49 டிரக்குகளில் கொண்டு செல்லப்பட்ட இரும்பு தாது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெல்லாரியில் சட்டவிரோதமாக சுரங்கப் பணிகள் நடப்பதாக லோக் ஆயுக்தா அறிக்கை சமர்பித்தது. அதில் கர்நாடக முதல்வர் எதியூரப்பா பெயரும் சேர்க்கப்பட்டது. இந்த விவகாரத்தால் எதியூரப்பா தனது பதவியை இழந்தார்.
இந்நிலையில் தான் இந்த வாகனங்கள் சிக்கியுள்ளன. கைப்பற்றப்பட்டுள்ள இரும்பு தாதை இன்னும் மதிப்பிடவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். அந்த 49 வாகனங்களும் பெல்லாரி மைனிங் கார்பரேஷனுடையதாக இருக்கக்கூடும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
இரும்பு தாது எடுத்துச் செல்ல தாங்கள் அனுமதி பெற்றுள்ளதாக டிரக் டிரைவர்கள் தெரிவித்தனர். ஆனால் அது சாத்தியம் இல்லை. பெல்லாரி மாவட்டத்தில் சுரங்கப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறும், அங்கிருந்து இரும்பு தாது பொருட்களை எங்கும் எடுத்துச் செல்லக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications