மு.க.அழகிரியின் கூட்டாளி எஸ்.ஆர். கோபி மீது கொலை வழக்குப் பதிவு
மதுரை: மதுரையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த விபத்து வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கூட்டாளி எஸ்.ஆர்.கோபி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில்தான் எஸ்.ஆர். கோபி நில அபகரிப்பு வழக்கில் சரணடைந்தார். இந்த நிலையில் விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு அதில் கைது செய்யப்பட்டுள்ளார் கோபி.
கடந்த 2009 ஆம் ஆண்டு மதுரையில் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வில்லாபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில், கம்யூனிஸ்ட் கட்சியினரின் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சில நாட்களிலேயே அவர் கார் மோதி உயிரிழந்தார்.
இது சாலை விபத்தாக அப்போது பதிவு செய்யப்பட்டது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இடம் கொடுத்ததற்காக அவர் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்டதாக தற்போது வழக்குப் பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக எஸ்.ஆர்.கோபி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications