சீக்கிய பல்கலை. துணை வேந்தர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு

Subscribe to Oneindia Tamil

பத்தேஹ்கார் சாஹிப்: பஞ்சாபில் உள்ள ஸ்ரீ குரு கிரான்த் சாஹிப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.

நாடு முழுவதும் உள்ள சீக்கிய ஆலயங்களை நிர்வகிக்கும் ஷிரோமணி குர்த்வாரா பர்பந்தக் குழு பஞ்சாப் மாநிலம் பத்தேஹ்கார் சாஹிபில் ஸ்ரீ குரு கிரான்த் சாஹிப் பல்கலைக்கழகத்தை துவங்கியுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தை பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கடந்த 25-ம் தேதி திறந்துவைத்தார்.

ஷிரோமணி குர்த்வாரா பர்பந்தக் குழுவின் தலைவர் அவ்தார் சிங் மக்கார் பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். முனைவர் ஜஸ்பிர் சிங் அலுவாலியா என்பவர் அதன் துணை வேந்தராக உள்ளார்.

பல்கலைக்கழகம் துவங்கிய ஒரு வாரத்திற்குள் அதன் துணை வேந்தரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த தாக்குதலின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+