காய்ச்சலால் அவதிப்படும் சோனியா காந்தி- காங். ஆலோசனைக் கூட்டத்திற்கு வரவில்லை
டெல்லி: வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இத்தொடரில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம், விலைவாசி உயர்வு, தெலுங்கானா விவகாரம் ஆகிய பிரச்சனைகளை அவையில் எழுப்ப பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.
இந்த சாவல்களை எதிர்க் கொள்ளும் வகையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், கட்சித் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை. சோனியாவிற்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது.
இதனால், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூட்டத்திற்கு தலைமை வகித்து நடத்தினார். மேலும், சோனியா கலந்து கொள்ள இருந்த ராஜீவ் காந்தி சாத்பவனா விருது நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications