ஆகஸ்ட் 5ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil

தழுவிய வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, வங்கியின் பணிகளை தனியார் ஏஜென்சிகளிடம் கொடுக்கக் கூடாது, வங்கி சீர்திருத்த
நடவடிக்கைகளை கைவிட வேண்டும், நிலுவையிலுள்ள கத்தேல்வால் குழு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் கடந்த
சில வருடமாக போராடி வருகின்றனர். ஆனால் இவர்களின் குரலுக்கு மத்திய அரசு செவிசாயக்கவில்லை.
இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகளில்
பணிபுரியும் 10 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோர் வரும் 5-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். இதனால் அன்று
வங்கிப் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications