ஸ்விஸ் வங்கிகளில் கறுப்புப் பணம்-இந்தியர்கள் விவரம் கிடைத்துள்ளது: பிரணாப்
டெல்லி: ஸ்வி்ஸ் நாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள இந்தியர்களின் முதலீடுகள் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதை இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் பேசிய அவர், ஸ்விஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை முடக்கி வைத்துள்ள இந்தியர்கள் குறித்த விவரம் கிடைத்துள்ளது. வரி ஏய்ப்பு செய்யப்பட்ட இந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழ் (Double Taxation Avoidance Agreement-DTAA) ஸ்வி்ஸ் நாடு இந்த விவரத்தை இந்தியாவிடம் தந்துள்ளது. அந்த ஒப்பந்தப்படி, முதலீடு செய்தவர்களின் விவரத்தை வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கறுப்புப் பணத்தை முடக்கி வைத்துள்ளவர்களின் பெயர் விவரத்தை வெளியிட முடியாது.
அதே நேரத்தில் இந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர 5 அம்ச திட்டத்தை வகுத்துள்ளோம் என்றார் முகர்ஜி.












Click it and Unblock the Notifications