குடும்பத்தோடு இறப்புச் சான்றிதழ் கேட்டு மணப்பாறை தாசில்தாரிடம் நூதன விண்ணப்பம்
மணப்பாறை : மணப்பாறை தாசில்தாரிடம் தனது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு இறப்புச் சான்றிதழ் தருமாறு மணிமாறன் என்பவர் நூதன விண்ணப்பம் கொடுத்துள்ளார்.
புத்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவரும் இவரது குடும்பத்தினர் நான்கு பேரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பலமுறை முயன்றுள்ளனர். ஆனால் அது முடியவில்லை. பலமுறை மனு கொடுத்தும் பெயர்கள் சேர்க்கப்படவில்லை.
இதனால் விரக்தி அடைந்த மணிமாறன் மணப்பாறை தாசில்தார் அலுவலகத்திற்கு இன்று வந்து ஒரு மனு கொடுத்தார். அதில் தனக்கும், தனது குடும்பத்தினர் நான்கு பேருக்கும் இறப்புச் சான்றிதழ் தருமாறு கோரியிருந்தார். இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மணிமாறன் கூறுகையில், சத்துணவு அமைப்பாளர் முத்துக்கருப்பன்தான் எங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விடாமல் தடுத்து வருவதாக குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications