காங்கிரசால் நாட்டையும், மக்களையும் காப்பாற்ற முடியாது - தமிழிசை சவுந்திரராஜன் கடும் தாக்கு

மேட்டுப்பாளையம் தொகுதி பாரதீய ஜனதா சார்பில் காரமடையில் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டு பேசியதாவது
இந்தியாவில் குண்டு வெடிப்பு கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் கூட மும்பையில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் பலியானார்கள். இதை மத்திய அரசால் தடுக்க முடியவில்லை. இந்திய அரசால் மக்களை பாதுகாக்க முடியவில்லை.
மத்தியில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சியால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
கல்வித் தந்தை கர்மவீரர் காமராஜரின் முகத்தை வாஜ்பாய் முகத்தில் பார்த்தேன். அதனால் தான் பா.ஜ.க -வில் இணைந்தேன்.
வாஜ்பாய் இன்னும் ஒரு வருடம் பிரதமராக இருந்திருந்தால் இந்திய நதிகளை இணைத்திருப்பார். வாஜ்பாய் இந்த நாட்டின் பெருமையை உயர்த்தியவர்.
காங்கிரஸ் கட்சியால் நாட்டையும், மக்களையும் காப்பாற்ற முடியாது. எனவே, நீங்கள் ராஜினாமா செய்து விட்டுப் போங்கள்.
இந்தியாவும், மக்களும் காப்பாற்றப்பட வேண்டும். இந்திய நாட்டை காப்பாற்ற பாரதீய ஜனதா கட்சியால் தான் முடியும். பாரதீய ஜனதாவை விட்டால் இந்த நாட்டில் வேறுவழியில்லை என்றார்.












Click it and Unblock the Notifications