மாஜி திமுக அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் உதவியாளர் மகன் கைது

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: முன்னாள் தி.மு.க., அமைச்சர் ஐ.பெரியசாமியின் உதவியாளர் தங்கவேல் மகன் அசோக்குமார் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் சிவாஜி, காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், திண்டுக்கல், வத்தலக்குண்டு காந்தி நகரைச் சேர்ந்த தங்கவேல் மகன் அசோக்குமார் என்பவர் விராலிப்பட்டியில் ஐந்து ஏக்கர் நிலத்தில் கல் குவாரி வைக்க கலெக்டரிடம் அனுமதி கேட்டார்.

அதன்பேரில் 2007, டிசம்பர் 7 முதல் 2017 வரை அனுமதி வழங்கப்பட்டது. கல்குவாரிக்கு அருகே உள்ள புறம்போக்கு நிலம், 4.98 ஏக்கரை ஆக்கிரமித்து கல் எடுத்து வருகிறார். இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, சட்டத்தை மீறி செயல்படும் அசோக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியருந்தார்.

எஸ்.பி.,யின் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் மேற்கண்ட விசாரித்தார். இதில், புகார் உண்மை எனத் தெரிந்தது. இதையடுத்து, அத்துமீறி அரசு நிலத்தில் நுழைந்தல், கல் திருடுதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் அசோக்குமார் மீது வழக்கு பதிந்து கைது செய்தார்.

போலீசாரால் கைது செய்யப்பட்ட அசோக்குமார், முன்னாள் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியின் உதவியாளர் தங்கவேல் என்பவர் மகன் என்பது குறிப்பிடதக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+