விலைவாசி உயர்வு குறித்து விவாதிப்பதோடு சரி, நடவடிக்கை எடுப்பதில்லை: திமுக
டெல்லி: நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்து விவாதிப்பதோடு சரி, விவாதத்தின்போது எடுக்கப்படும் முடிவுகளை அரசு செயல்படுத்துவதில்லை என்று மக்களவை திமுக உறுப்பினர் டி.கே. எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
நேற்று மக்களவையில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டது. காலையில் கேள்வி நேரம் நடந்தது. அது முடிந்ததும் பிற்பகலில் விவாதம் தொடங்கியது. பாஜக சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன் மீது விவாதம் தொடங்கியது. முதலில் பாஜக உறுப்பினர் யஷ்வந்த் சின்ஹா பேசினார்.
யஷ்வந்த் சின்ஹா பேசுகையில், விலைவாசி உயர்வைத் தடுக்க மத்திய அரசு ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இன்று பணவீக்கம் உயர்ந்து கொண்டே போகிறது. விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது என்றார்.
பின்னர் மூத்த திமுக தலைவரான டி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில்,
தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் வகையில் பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
திமுக ஆட்சியின்போது இடைத்தரகர்களை ஒழிக்கவும், விவசாயிகள் நேரடியாக பயனடையவும் உழவர் சந்தை தொடங்கி நடத்தப்பட்டது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை கொண்டு வருமாறு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்திலும் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்கப்படுகிறது. ஆனால் விவாதத்தின்போது எடுக்கப்படும் முடிவுகளை அரசு செயல்படுத்துவதில்லை.
அரசு இந்த விவாதத்தை வெறும் சடங்காக நினைக்கக் கூடாது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் இருப்பது போன்று நாடு முழுவதும் பொது விநியோக திட்டம் மற்றும் உழவர் சந்தைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications