சமச்சீர் கல்வி வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

Supreme Court
டெல்லி: சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

தமி்ழகத்தில் சம்ச்சீர் கல்வியை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்றும், அதற்கான பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு வினியோகிக்குமாறும் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறும் கோரியிருந்தது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் சமச்சீர் கல்வித் திட்ட பாடப் புத்தகங்களை விநியோகிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இறுதி விசாரணை கடந்த 26-ம் தேதி துவங்கியது. சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை. புத்தகங்கள் தரமானதாக இல்லை. எனவே இந்த ஆண்டு இத்திட்டத்தை அமல்படுத்துவது இயலாத காரியம் தமிழக அரசு தர்பபில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் புத்தகங்களை வழங்குவதற்கான காலக் கெடுவை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் நீடித்தது.

இந்த நிலையில் இன்று இரு தரப்பு வக்கீல்களின் வாதமும் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து தீர்ப்பை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+