3 ஆண்டுகளில் 3,000 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், சொல்கிறது பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த 3 ஆண்டுகளில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாக, அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக், நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த, அமைச்சர் ரகுமான் மாலிக்: பாகிஸ்தானில் கடந்த் மூன்று ஆண்டுகளாக தீவிரவாதிகள் அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினரால், கைபர் பக்தூன்காவாவில் 2,103 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 3,554 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல பலுசிஸ்தான் பகுதியில் 431 பேரும் 343 ஆயுதங்களும், பஞ்சாப்பில் 231 பேரும் 55 ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிந்து பகுதியில் 130 பேர் கைது செய்யப்பட்டு 150 ஆயுதங்கள் பறிமுதல் செய்துள்ளனர். கில்ஜித்-பால்டீசியனில் 106 பேரும் 27 ஆயுதங்களும், பாடா பகுதியில் 80 பேரும், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 பேரும் 8 ஆயுதங்களும் சிக்கியுள்ளது. இஸ்லாமாபாத் நகரில் 15 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து, 5 லட்சம் பாகிஸ்தான் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு, பாகிஸ்தான் மீது தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார் மாலிக். மேலும், தீவிரவாதிகளின் தாக்குதலில் கடந்த 2 ஆண்டுகளில் 505 பேரும் பலியாகி உள்ளனர். 1,720 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications