மதுரையில் பிரபல ரவுடி ஆட்டோவில் கடத்தி கொலை
மதுரை: மதுரை அருகே பிரபல ரவுடியை ஆட்டோவில் கடத்தி சென்ற மர்மக்கும்பல் ஒன்று, கொலை செய்துவிட்டு தப்பிவிட்டது.
மதுரை, சோலையழகுபுரத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (26). பிரபல ரவுடி. இவன் மீது ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்பட பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், வெற்றிவேலை, 8 பேர் கொண்ட மர்மக்கும்பல் ஒன்று ஆட்டோவில் கடத்தி சென்றது. கரடிக்கல் செல்லும் சாலைக்கு சென்ற போது, வெற்றிவேலின் கழுத்தை அறுத்தும், உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். பின்பு அவனது உடலை அருகில் உள்ள பள்ளத்தில் போட்டுவிட்டு தப்பிவிட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, ஆட்டோ டிரைவர் ஆனந்தன் என்பவர் போலீசாரைக் கண்டதும், ஆட்டோவுடன் அந்த இடத்தில் இருந்து தப்பி செல்ல முயன்றார்.
ஆனால், சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததால் அவரால் வேகமாக செல்ல முடியாமல் போலீசாரிடம் சிக்கி கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். தகவல் அறிந்த மதுரை எஸ்.பி ஆஸ்ராகர்க் மற்றும் டி.எஸ்.பி. முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மதுரையில் பிரபல ரவுடியாக உலா வந்த வெற்றிவேல், ஆட்டோவில் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications