அரசு புறம்போக்கு நிலத்தை விற்ற திமுக செயலாளர் மனைவியோடு கைது!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை விற்ற தி.மு.க. செயலாளர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் அருகே உள்ள மேற்கு ஆயக்குடியில் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் பூமிதான இயக்கத்திற்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களுக்கு, தி.மு.க., ஒன்றியச் செயலாளரும் சிவகிரிப்பட்டி ஊராட்சித் தலைவருமான மாரியப்பன், அவருடைய மனைவி முருகேஸ்வரி ஆகிய இருவரும் போலிபத்திரம் தயாரித்து விற்பனை செய்துளள்னர்.
இதுகுறித்து, பழனி வட்டாட்சியர் மனோகரன் அளித்த புகாரின் பேரில், சிவகிரிப்பட்டி ஊராட்சித் தலைவர் மாரியப்பன், அவரது மனைவி முருகேஸ்வரி ஆகிய இருவர் மீதும் திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த நிலத்தின் மதிப்பு 3 கோடி ரூபாய் என போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications