இந்தியாவை பெரிய அளவில் சீர்குலைக்க பெரும் நாச வேலைக்கு அல் கொய்தா திட்டம்- உளவுத்துறை

Subscribe to Oneindia Tamil

Ilyas Kashmiri
டெல்லி: அல் கொய்தா அமைப்பும், இலியாஸ் காஷ்மீரி உள்ளிட்ட பயங்கரவாதிகளும் இணைந்து இந்தியாவில் மிகப் பெரிய அளவில் நாச வேலைகளில் ஈடுபடத் திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று ராஜ்யசபாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், சில பொதுவான உளவுத்தகவல்கள் அரசுக்குக் கிடைத்துள்ளன. குறிப்பிட்ட யாரையும், எதையும் குறிப்பிட்டு அந்தத் தகவல்கள் இல்லை. இருப்பினும் அல் கொய்தாவும், இலியாஸ் காஷ்மீரியைத் தலைவராகக் கொண்ட ஹூஜி அமைப்பும், இணைந்து பெரும் நாச வேலைகளில் ஈடுபடத் திட்டமிட்டு வருவதாக இந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க அரசு தயாராகவே உள்ளது. எந்தவகையிலும் தீவிரவாதத்தையும், வன்முறையையும் நியாயப்படுத்த முடியாது.

தொடர்ந்து மத்திய அரசு உஷாராகவே உள்ளது. உஷாராக இருக்குமாறு மாநில அரசுகளும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+