ஊழலுக்கு எதிராக நாடு தழுவிய பாரத யாத்திரையை துவக்கியது பார்வர்டு பிளாக் கட்சி

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: ஊழலுக்கு எதிராக நடத்தும் நாடு தழுவிய பாரத யாத்திரையை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கன்னியாகுமரியில் துவங்கினர்.

இந்த யாத்திரையில், சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு பாங்குளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளை முறியடிக்க வேண்டும்.

உலகமயமாக்குவோம் என்ற போர்வையில் வளரும் நாடுகளின் வளங்களை சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்களை முறியடிக்க வேண்டும். நேதாஜி சுபாசந்திர போஸ் பிறந்த தினமான ஜனவரி 23ம் தேதியை தேசபக்தி தினமாக அறவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

அகில இந்தி பார்வர்டு பிளாக் சார்பில் கன்னியாகுமரி முதல் டில்லி வரையிலும், காஷ்மீர் முதல் டெல்லி வரையிலும், திரிபுரா முதல் டில்லி வரையிலும் மணிப்பால் முதல் டில்லி வரையிலும் வாகன பிரசார யாத்திரை நடக்கிறது.

இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி-டில்லி பிரசார வாகன யாத்திரை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்து துவங்கியது. இந்த பேரணிக்கு கட்சியின் தேசிய செயலாளர் தேவராஜன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.

பேரணியை அகில இந்திய பொதுச் செயலாளர் பிஸ்வாஸ், மாநில பொதுச் செயலாளர் கதிரவன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பேரணி நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை வழியாக கேரளாவின் முக்கிய இடங்களுக்கு சென்று மீண்டும் தமிழகம் வந்து கர்நாடகா வழியாக செப்டம்பர் 5 ம் தேதி டில்லி செல்கின்றது. டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+