நேரு பெயரைப் பயன்படுத்தி ரூ.4.5 லட்சம் மோசடி- போலீஸ் விசாரணை
கரூர்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பெயரில் 4.5 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர்கள் குறித்து கரூர் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் வசித்து வருபவர்கள் கருணாகரன், சம்பத், லோகநாதன். இவர்கள் மூன்று பேரும் கரூர் எஸ்.பி.நாகராஜனிடம் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
திருச்சி உறையூரில் கார்த்திக் செராமிக் என்ற பெயரில் கடை நடத்தி வரும் ரவீந்திரன் மற்றும் அவரது சகலை முருகானந்தம். இருவரும் தொழில் செய்ய தலா 1.5 லட்சம் ரூபாய் எங்களிடம் வாங்கினர்.
பணம் பெற்றுக கொண்டதற்காக இருவரும் எவ்வித முறையான பத்திரமு்ம் வழங்கவில்லை. மேலும், பெரம்பலூரில் கிளை நிறுவனமும் துவக்கவி்ல்லை. வரவு செலவு கணக்கையும் ஒப்படைக்கவில்லை, இதுகுறித்து கேட்கும் போதெல்லாம், ஏதாவது கூறி தப்பி வந்தனர்.
இதுகுறித்து கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கே.என்.நேருவிற்கு நெருங்கியவர்கள் என போலீசார் புகாரை கிடப்பில் போட்டதாக சந்தேகம் ஏற்படுகிறது. எனவே, மோசடி நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர். இந்த புகார் மீது விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசாருக்கு கரூர் எஸ்.பி. நாகராஜன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications