மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து கெடுத்தார் கல்லூரி தலைவர்- மாணவர் தகவல்
நாகர்கோவில்: நாகர்கோவில் நர்சிங் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக கல்லூரித் தலைவர் பலாத்காரம் செய்ததாக அக்கல்லூரியின் மாணவர் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் பிரபலமான பகுதியில் பாராமெடிக்கல் கல்லூரி ஒன்று உள்ளது. அங்கு முதலாமாண்டு படித்து வரும் மாணவி அவசர கால ஹெப்-லைனுக்கு போன் செய்தார். அதில் கல்லூரியில் தங்களை கொடுமைப்படுத்துவதாக கூறினார். இந்த தகவலை அடுத்து, குழந்தைகள் கடத்தல் மற்றும் சித்ரவதை தடுப்பு பிரிவு போலீசார் சென்றனர்.
முதலில் கல்லூரி நிர்வாகத்திடம் பேசியபோது அந்த மாணவிக்கும், ஒரு மாணவருக்கும் இடையேயான காதலை கல்லூரி நிர்வாகத்தினர் கண்டித்தனர். மற்ற மாணவ, மாணவிகள் வேண்டுகோளுக்கு இணங்கி, நேற்று காலையில் இருவரையும் கல்லூரியை விட்டு வெளியேற்றினோம்.
மாணவியின் உறவினர்களை வரசொல்லி இருக்கிறோம். அதற்குள் போன் செய்து விட்டாள் என்றனர். இதை கேட்ட போலீசார் மாணவிகளிடம் விசாரித்தனர். அப்போது கல்லூரி நிர்வாகத்தினரே 2, 3 மாணவிகளை அழைத்து வந்துள்ளனர். ஆனால் போலீசார் சம்பந்தப்பட்ட மாணவியை விசாரித்தனர்.
அப்போதுதான் கல்லூரி சேர்மன் தன்னை பலத்காரம் செய்துவிட்ட தகவலை கூறி அவர் அழுதார். மேலும் சில மாணவிகளை விசாரிக்க அவர்களும் தங்கள் தோழிக்கு நடந்த கொடுமைகளை கூறி அழுதனர். ஆனால் கல்லூரி நிர்வாகத்தினர் இதை மறுத்தனர். நிலை வேறு விதமாக சென்றதால் டிஎஸ்பி பாஸ்கரனுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உடனடியாக வடசேரி போலீசார் விரைந்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் ஜிடி தலைமையில் போலீசார் விசாரித்த போது தான் பலாத்கார விவகாரம் வெளியானது. இதனால் காதல் ஓன்று குற்றம்சாட்டப்பட்ட மாணவரை விசாரிக்க முடிவு செய்தனர். அவரது செல்போனில் தொடர்பு கொண்ட போது கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் எங்குசெல்வது எனதெரியாமல் நாகர்கோவில் பூங்காவில் இருப்பதாக கூறினார்.
இதையடுத்து போலீசார் பூங்காவில் இருந்து மாணவரை வரவழைத்து பேசினர். அப்போது கடந்த 11ம் தேதி பகல் 2.30 மணிக்கு மாணவியை ஆண்கள் விடுதிக்கு சேர்மன் அசோக்குமார் அழைத்து வந்தார். உடல் நிலை சரியில்லாததால் நான் வேறொரு அறையில் படுத்திருந்தேன். அப்போது மாணவியை தனி அறைக்குள் கூட்டி சென்றார்.
பின்னர் வெளியே வரும்போது அவர் பலத்காரம் செய்யப்பட்டு இருந்தது உறுதியானது. இதை வெளியே சொல்ல கூடாது என்றும் மிரட்டினார். ஆனால் நான் வெளியே சொல்லி விடுவேன் என பயந்து கல்லூரியில் இருந்து வெளியை அனுப்பி விட்டனர்.
மாணவி தனக்கு உதவும்படி இந்த மாணவரை கேட்டு கொண்டுள்ளார். இந்த விபரம் தெரிந்து தான் இருவரையும் வெளியேற்ற கல்லூரி நிர்வாகத்தினர் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications