தேர்தலின்போது கோடிக்கணக்கில் பணத்தைப் பறிமுதல் செய்த ஆர்.டி.ஓவுக்கு கல்பனா சாவ்லா விருது!

சென்னையில் இன்று 65வது சுதந்திர தின விழா கோலாகலாகமாக கொண்டாடப்பட்டது. தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். பின்னர் பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் அவர் வழங்கினார்.
அதில் முக்கியமானது கல்பனா சாவ்லா விருது. தீரச் செயல் புரிந்த பெண்களுக்கு வழங்கப்படும் விருது இது. இந்த ஆண்டுக்கான விருது திருச்சி வருவாய் கோட்டாட்சியரான சங்கீதாவுக்கு வழங்கப்பட்டது. இதற்கான விருதையும் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையையும் சங்கீதாவுக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கிக் கெளரவித்தார்.
ஆர்.டி.ஓ. சங்கீதா சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். திருச்சி மேற்குத் தொகுதி தேர்தல் அதிகாரியாக அப்போது சங்கீதா செயல்பட்டார். அந்த சமயத்தில் ஒரு ஆம்னி பேருந்தில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பெருமளவில் பணம் கொண்டு செல்லப்படுவதாக இரவு 2 மணியளவில் அதிகாரி சங்கீதாவுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் போலீஸ் துணையைக் கூட நாடாமல் தனியாக அந்தப் பேருந்தை விரட்டிச் சென்று நிறுத்தினார். பின்னர் பேருந்தை மடக்கி தீவிரமாக தானே சோதனை போட்டார். அப்போது கிட்டத்தட்ட ரூ. 5 கோடி அளவுக்கு பெரும் பணம் சிக்கியது.
அந்தப் பணத்தை திமுகவின் முக்கியப் புள்ளி ஒருவர்தான் அனுப்பி வைத்ததாக அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மேற்குத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரி சங்கீதாவின் செயல் அப்போது அனைவராலும் பாராட்டப்பட்டது. துணிச்சலுடன் நள்ளிரவு நேரம் என்று கூட பார்க்காமல் தனியாக சென்று பஸ்சை மடக்கிப் பிடித்து பணத்தைப் பறிமுதல் செய்த அவரது வீரம் பாராட்டப்பட்டது. அவருக்குத்தான் இன்று கல்பனா சாவ்லா விருதினை முதல்வர் வழங்கியுள்ளார்.
இதேபோல மேலும் பலருக்கும் முதல்வர் ஜெயலலிதா விருதுகளையும், பரிசுகளையும் வழங்கிக் கெளரவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications