காரைக்குடி- தேவகோட்டை மகளிர் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்- நாம் தமிழர்
காரைக்குடி: காரைக்குடியில் இருந்து தேவகோட்டை வரை மகளிர் சிறப்பு பஸ் தனியாக இயக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
காரைக்குடி பஸ் நிலையம் அருகில் ஜெகன் ஹோட்டலில் நாம் தமிழர் கட்சி செயற்குழு கூட்டம் அதன் நகர ஒருங்கிணைப்பாளர் கரு.சாயல்ராம் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லேனா மாறன் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி, கிரனூர் துரைப்பாண்டி, காரைக்குடி மதிவாணன், திரைப்பட இயக்குனர் பிரபாகரன், இளையன்குடி லெனின், காரைக்குடி அகிலன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இலங்கை அரசின் போர்குற்ற நிகழ்வுகளை குறுந்தகடு மூலம் பொது மக்களிடம் எடுத்துச் செல்வது, தமிழக சட்டசபையில் இலங்கை மீது பொருளாதரா தடை விதிக்க வேண்டும் என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொச்சைப்படுத்திய இலங்கை அதிபர் ராஜபக்ஷே, அவரது தம்பி கோத்பய ராஜபக்ஷே ஆகியோரை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது.
பேரறிவாழனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணையை இந்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். காரைக்குடியில் இருந்து தேவகோட்டை வரை காலை மற்றும் மாலை நேரங்களில் மகளிர் சிறப்பு பஸ் இயக்க வேண்டும்.
காரைக்குடியில் நகரத்தில் உள்ள சம்பை ஊற்றை பாதுகாக்க தமிழக அரசை வலியுறுத்துவது, காரைக்குடி நகரத்திற்குள் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், நீதிமன்றம் போன்றவைகளை இணைக்கும் விதமாக (டவுன் பஸ்) நகர பஸ்சை உடனே இயக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவது போன்ற பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications