மதுரை கலெக்டர் சகாயத்தின் தாயார் புதுக்கோட்டையில் மரணம்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயத்தின் தாயார் செளரியம்மாள் புதுக்கோட்டை மாவட்டம் அய்யனார்புரத்தில் மரணமடைந்தார்.
கலெக்டர் சகாயத்தின் தாயாரன 87 வயது செளரியம்மாள், புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுழி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தனது மூத்தமகனுடன் புதுக்கோட்டை அய்யனார்புரத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அவர் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரது உடல் பெருஞ்சுழி கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடல் அடக்கம் நடைபெறுகிறது.
தாயாரின் மரணச் செய்தியை அறிந்ததும், கலெக்டர் சகாயம் தனது குடும்பத்தினருடன் புதுக்கோட்டைக்குப் புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications