விழுப்புரத்தில் அதிமுகவினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்-கோஷ்டி மோதலில் விபரீதம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அ.தி.மு.க.,வினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர். ராம ஏகாம்பரம். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அ.தி.மு.க., ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜகோபால் ஆகியோர் இடையே பேனரில் பெயர் போடுவது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த கருத்து வேறுபாடு, கடந்த மாதம் விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் மோகன் வரவேற்பு நிகழ்ச்சியில் பூதகரமாக வெடித்தது. பேரங்கியூர் கிராமத்தில் பாட்டுக் கச்சேரி நடந்தது. இதில் மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதில், இருதரப்பினரும் ஒருவரையொருவர் அரிவாள், இரும்பு பைப்பால் தாக்கி கொண்டதில், பன்னீர்செல்வம் (50), குணசேகரன் (37), பாலு(40), ஆறுமுகம், கந்தன், கண்ணன், சுதாகர், ராமு, ரமேஷ் ஆகிய 9 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து பேரங்கியூர் கிராமத்தில் போலீஸ் படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரி்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications