பாரத் ரத்னா விருது வேண்டுமென்றால் சச்சின் ஐபிஎல்லில் ஆடக் கூடாது- ம.பி.முதல்வர்

இதுகுறித்து அவர் கூறுகையில், பாரத் ரத்னா விருதுக்கு சச்சினை பரிசீலிப்பதாக இருந்தால் முதலில் அவர் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதை நிறுத்த வேண்டும். இது எனது தாழ்மையான கருத்தாகும்.
சச்சின் போன்ற வீரர்கள் விற்கப்படுவதும்,விலைக்கு வாங்கப்படுவதும் வேதனை தருகிறது. ஒரு வீரர் நாட்டுக்காகத்தான் ஆட வேண்டுமே தவிர கம்பெனிகளுக்காக ஆட் கூடாது. அப்படிப்பட்ட வீரருக்குத்தான் பாரத் ரத்னா விருது கொடுக்கப்படுவது பொருத்தமாக இருக்கும்.
இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல். வீரர்களை வர்த்தகப் பொருட்களாக்கி விட்டது. விளையாட்டை நாசமாக்கி விட்டது.
உண்மையில் ஒரு விளையாட்டு வீரருக்குப் பாரத் ரத்னா விருது தருவதாக இருந்தால் முதலில் ஹாக்கி மேதை தியான் சந்த்துக்குத்தான் தர வேண்டும். அவர் இந்திய ஹாக்கியின் உயிர் நாடி ஆவார். இந்திய ஹாக்கிக்குப் பெருமை தேடிக் கொடுத்தவர் அவர். டெண்டுல்கர் மிகச் சரியான,சிறந்த, தகுதியான வீரராக இருந்தாலும் கூட முதலில் தியான் சந்த்துக்குத்தான் அந்த மரியாதையை அரசு செய்ய வேண்டும்.
இந்தியாவிலேயே ஒரு விளையாட்டு வீரருக்கு முதன் முதலில் ஸ்டாம்ப் வெளியிட்டது தியான் சந்துக்குத்தான் என்பது நினைவு கூறத்தக்கது என்றார் செளகான்.
செளகான் சொல்வதை சச்சின் கேட்பாரா?












Click it and Unblock the Notifications