50 வருடம் எம்.ஜி.ஆரின் உதவியாளராக பணியாற்றிய முத்து மரணம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் கிட்டத்தட்ட 50 வருடங்கள் உதவியாளாரகப் பணியாற்றிய முத்து என்கிற எம்ஜிஆர் முத்து மதுரை அருகே திருப்புவனத்தில் மரணமடைந்தார்.

எம்.ஜி.ஆரின் நிழல் போல திகழ்ந்தவர் முத்து. எம்ஜிஆரின் உதவியாளராக கிட்டத்தட்ட 50 வருடங்கள் செயல்பட்டார். அவருடனேயே எப்போதும் இருந்தார்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தின் நிர்வாகியாக செயல்பட்டார். பின்னர் மதுரை அருகே உள்ள திருப்புவனத்திற்கு இடம் பெயர்ந்தார். அங்கு வசித்து வந்தார்.

77 வயதான முத்துவுக்கு சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முத்து மரணமடைந்தார்.

எம்ஜிஆரின் மனித நேயம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் முத்து. அவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இன்று மாலை முத்துவின் உடல் தகனம் திருப்புவனத்தில் நடைபெறுகிறது.

முத்துவின் உடலுக்கு அதிமுகவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+