சொத்துக் குவிப்பு வழக்கு- நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜரானார் அமைச்சர் பச்சமால்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக நாகர்கோவில் நீதிமன்றத்தில் வனத்துறை அமைச்சர் பச்சமால் இன்று ஆஜரானார்.
கடந்த 2001-06 அ.தி.மு.க., ஆட்சியின்போது குளச்சல் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் பச்சமால். அதற்கு பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நாகர்கோயில் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
தற்போது, தமிழக வனத்துறை அமைச்சரான உள்ள பச்சமால் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேரில் வந்து ஆஜராகும்படி அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில், நாகர்கோயில் நீதிமன்றத்தில், இன்று ஆஜராகினார்.












Click it and Unblock the Notifications