ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராகும் சிரஞ்சீவி!

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் சிரஞ்சீவி 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியைத் தொடங்கினார். கடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் அவரது கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர் காங்கிரசில் சேர்ந்தார். தனது கட்சியையும் காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.பின்னர் அவர் சோனியா முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராக சேர திட்டமிட்டிருந்தார். சோனியா உடல் நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் தங்கி உள்ளார்.
இதையடுத்து சிரஞ்சீவி, ராஜீவ்காந்தி பிறந்த நாளான இன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினர் ஆகிறார். அவருடன் 16 எம்.எல்.ஏ.க்களும் டெல்லி சென்றுள்ளனர்.
எனக்குப் பெருமை
இது குறித்து சிரஞ்சீவி கூறுகையில், "நான் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினர் ஆவதை பெருமையாகக் கருதுகிறேன். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை பலமானதாக மாற்ற பாடுபடுவேன்," என்றார்.












Click it and Unblock the Notifications