பேரறிவாளன், சாந்தன், முருகன் உயிரை காக்க ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

Subscribe to Oneindia Tamil

Vaiko
சென்னை: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரைக் காப்பாற்ற முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று காலை 11 மணிக்கு மக்கள் இயக்கம் சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது நிருபர்களிடம் பேசிய வைகோ,

நிரபராதி தமிழர்களான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து, அவர்களின் உயிரை தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் மட்டுமே காப்பாற்ற முடியும். இதை அவர் செய்வார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

முன்னதாக வேலூர் ஊரீசு கல்லூரியில் தேவநேய பாவாணர் தமிழ் மன்ற தொடக்க விழாவில் நேற்று பேசிய வைகோ, எனக்குத் தரப்பட்டுள்ள தலைப்பு உரிமைக் களம். சித்திரம் தீட்ட பயன்படும் காகிதம் உரிமைக் களம், சிலை வடிக்கும் சிற்பிக்கு பாறை உரிமைக் களம், வானம்பாடிக்கு வானம் உரிமைக் களம், போராளிக்கு யுத்த பூமியே உரிமைக் களம்.

இது கட்சிக்கு அப்பாற்பட்ட விழாவாகும். வெளியில் சாலையில் கட்சியின் கொடி கட்டியிருப்பது அவர்களின் உரிமைக் களமாகும். ஆனால் கல்லூரிக்குள் கட்சி கொடிகள் இருக்க கூடாது. நான் வரும் வழியில் எனது வாகனத்தில் கட்சி கொடி இருந்தது. எனக்கு பின்னால் மேலும் சில வாகனங்கள் வந்து கொண்டு இருந்ததால் நான் கல்லூரி வாசலிலேயே வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து வந்தேன்.

அதன்பிறகு இந்த அரங்கத்தில் உள்ள கட்சியினரை வெளியில் உட்காருமாறு கூறினேன். ஏனெனில் இது மாணவர்களின் நிகழ்ச்சி. இது கட்சி நிகழ்ச்சி கிடையாது.

வடமொழியின் பிடியில் இருந்து தாய் தமிழை மீட்க வேண்டும் என்று கூறிய தேவநேய பாவாணர் பெயரில் தமிழ் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிக்கு நான் வந்தது குறித்து பெருமைப்படுகிறேன்.

உலகில் முதல் இனம் தமிழ் இனம் என்பதை ஆய்வின் மூலம் நிரூபித்தவர் தேவநேய பாவாணர். ஈழத்தில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பல கொடுமைகள் அரங்கேறி உள்ளன. ஈழத்தில் மக்களுக்கு தொண்டு செய்தது திருச்சபைதான்.

ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழினம் கொன்று குவிக்கப்பட்டுள்ளது. இளம் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். தமிழ் இளைஞர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்ரவதை செய்து சுட்டு கொல்லப்பட்டனர்.

ஈழத் தமிழரின் உரிமைக்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் போராடினர். தமிழர் பகுதியில் இன்று சிங்களர்கள் குடியேறி வருகின்றனர். இவை எல்லாம் ஐ.நா. சபை அமைத்த 3 பேர் கொண்ட குழுவில் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தற்போது குற்றமற்ற 3 பேர் வேலூர் ஜெயிலில் தூக்கு மர நிழலில் உள்ளனர். எந்த நேரத்திலும் இலங்கை தமிழர்களை மாணவர்களாகிய நீங்கள் அவர்களை பாதுகாக்க முடியும். மாணவர்கள் கையில் தான் நாட்டின், தமிழ் இனத்தின் எதிர்காலம் உள்ளது. தமிழ் இனத்துக்காகவும், உலகின் மூத்த மொழியான தமிழை ஆட்சி மொழியாக்கவும் நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+