திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகள் ஏற்கனவே 2 முறை திறக்கப்பட்டதா?
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் ரகசிய அறைகள் ஏற்கனவே 2 முறை திறக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் போலீசாரிடம் கிடைத்துள்ளது. அப்போது போட்டோ மற்றும் வீடியோவும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் 5 ரகசிய அறைகள் திறக்கப்பட்டு, 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொக்கிஷங்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டது. திறக்கப்படாமல் இருந்த கடைசி அறையை திறந்து முழு பொக்கிஷங்களையும் மதிப்பிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், கடைசி ரகசிய அறையை திறந்தால், நாட்டில் பேராபத்துகள் ஏற்படும் என தேவபிரசன்னத்தில் தெரிந்ததாக கூறப்பட்டது. மேலும் பொக்கிஷங்களை போட்டோ அல்லது வீடியோ எடுத்து வெளிஉலகிற்கு காட்டக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், அந்த அறையை திறப்பதில் அதிகாரிகள் தயக்கம் காட்டி வந்தனர்.
பொக்கிஷங்களை மதிப்பிடு செய்வதற்காக, உச்சநீதிமன்றம் குழுவை அமைத்த நிலையில், அதை திறக்க தடைவிதிக்கும்படி, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், மேற்கூறிய ரகசிய அறைகள் ஏற்கனவே 2 முறை திறக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரகசிய அறைகள் திறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக, சுற்றறிக்கை ஒன்று கோயில் நிர்வாகி சார்பில் ஒட்டியுள்ளது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
போலீசாருக்கு கிடைத்துள்ள இந்த சுற்றறிக்கையின் நகலில், திருவிதாங்கூர் மன்னர் ஆணைப்படி ரகசிய அறைகளில் உள்ள தங்கம், வெள்ளி மற்றும் இதரப் பொருட்களை போட்டோ எடுத்து ஆல்பம் தயாரிக்க வேண்டியுள்ளதால், 3.08.2007 அன்று மதியம் 2 மணிக்கு பின் ரகசிய அறைகள் திறக்கப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மறைந்த சுந்தர்ராஜ் அய்யர் என்பவர் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், கடந்த 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி ரகசிய அறைகள் திறக்கப்பட்டுள்ளது.
போட்டோ எடுப்பதற்காக தற்போது திறக்கப்படுகிறது என கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்திருந்தார். அதன்பின் ரகசிய அறைகளை உடனடியாக பூட்டி சீல் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், 28 நாட்களுக்கு பிறகே பூட்டப்பட்டுள்ளது.
ஆனால், 2002ம் ஆண்டு எதற்காக ரகசிய அறைகள் திறக்கப்பட்டது என்பது தெரிக்கப்படவில்லை. அப்போது, கோயிலின் சில பகுதிகளில் மூலாம் பூசப்பட்டப்பட்ட போது, ரகசிய அறைகளில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ரகசிய அறைகளை திறந்தால், நாட்டிற்கே ஆபத்து என கூறப்பட்ட நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் ஏற்கனவே 2 முறை திறக்கப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications