திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகள் ஏற்கனவே 2 முறை திறக்கப்பட்டதா?
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் ரகசிய அறைகள் ஏற்கனவே 2 முறை திறக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் போலீசாரிடம் கிடைத்துள்ளது. அப்போது போட்டோ மற்றும் வீடியோவும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் 5 ரகசிய அறைகள் திறக்கப்பட்டு, 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொக்கிஷங்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டது. திறக்கப்படாமல் இருந்த கடைசி அறையை திறந்து முழு பொக்கிஷங்களையும் மதிப்பிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், கடைசி ரகசிய அறையை திறந்தால், நாட்டில் பேராபத்துகள் ஏற்படும் என தேவபிரசன்னத்தில் தெரிந்ததாக கூறப்பட்டது. மேலும் பொக்கிஷங்களை போட்டோ அல்லது வீடியோ எடுத்து வெளிஉலகிற்கு காட்டக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், அந்த அறையை திறப்பதில் அதிகாரிகள் தயக்கம் காட்டி வந்தனர்.
பொக்கிஷங்களை மதிப்பிடு செய்வதற்காக, உச்சநீதிமன்றம் குழுவை அமைத்த நிலையில், அதை திறக்க தடைவிதிக்கும்படி, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், மேற்கூறிய ரகசிய அறைகள் ஏற்கனவே 2 முறை திறக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரகசிய அறைகள் திறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக, சுற்றறிக்கை ஒன்று கோயில் நிர்வாகி சார்பில் ஒட்டியுள்ளது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
போலீசாருக்கு கிடைத்துள்ள இந்த சுற்றறிக்கையின் நகலில், திருவிதாங்கூர் மன்னர் ஆணைப்படி ரகசிய அறைகளில் உள்ள தங்கம், வெள்ளி மற்றும் இதரப் பொருட்களை போட்டோ எடுத்து ஆல்பம் தயாரிக்க வேண்டியுள்ளதால், 3.08.2007 அன்று மதியம் 2 மணிக்கு பின் ரகசிய அறைகள் திறக்கப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மறைந்த சுந்தர்ராஜ் அய்யர் என்பவர் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், கடந்த 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி ரகசிய அறைகள் திறக்கப்பட்டுள்ளது.
போட்டோ எடுப்பதற்காக தற்போது திறக்கப்படுகிறது என கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்திருந்தார். அதன்பின் ரகசிய அறைகளை உடனடியாக பூட்டி சீல் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், 28 நாட்களுக்கு பிறகே பூட்டப்பட்டுள்ளது.
ஆனால், 2002ம் ஆண்டு எதற்காக ரகசிய அறைகள் திறக்கப்பட்டது என்பது தெரிக்கப்படவில்லை. அப்போது, கோயிலின் சில பகுதிகளில் மூலாம் பூசப்பட்டப்பட்ட போது, ரகசிய அறைகளில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ரகசிய அறைகளை திறந்தால், நாட்டிற்கே ஆபத்து என கூறப்பட்ட நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் ஏற்கனவே 2 முறை திறக்கப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications