சேப்பாக்கம், திருவல்லிக்கேணிக்கு புதிய அதிமுக நிர்வாகிகள்: ஜெயலலிதா அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சேப்பாக்கம், திருவல்லிக்கேணி அதிமுக நிர்வாகிகளை மாற்றி கட்சி பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தென்சென்னை மாவட்டம் சேப்பாக்கம்- திருவல்லிக் கேணி சட்டமன்ற தொகுதி அதிமுக இணைச் செயலாளர் பொறுப்பில் உள்ள ஆர்.தேனப்பன் 28-9-2011 அன்று முதல் பொறுப்பில் இருந்த விடுவிக்கப்பட்டு அதில் எஸ். ஜனார்த்தனன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.தேனப்பன் 89-வது வட்ட கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 91- வது வட்ட கழகப் பொருளாளர் பொறுப்பில் கம்ப்யூட்டர் குமார், தி.நகர் 125-வது வட்ட அவைத் தலைவராக ஜோதிமணியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications