புதுவையில் ராமகோபாலன், தங்கபாலு உருவ பொம்மையை எரிப்பு
புதுவை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கில் போட வலியுறுத்திய இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோரது உருவ பொம்மையை போலீசாரின் எதிர்ப்பை மீறி இந்திய குடியரசு கட்சியினர் எரித்தனர்.
புதுவையில் இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் அளித்த ஒரு பேட்டியில், ராஜீவ்காந்தி கொலையாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து புதுவை முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் வெங்கட சுப்பா ரெட்டியார் சிலை அருகே அதன் தலைவர் கவுதம் பாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த போது திடீரென்று மறைத்து வைத்து இருந்த இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் உருவ பொம்மையை சிலர் எரிக்க முயன்றனர். இதை போலீசார் தடுக்க முயன்ற போது, இரு தரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து ராமகோபாலன் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 30 பேரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர். ஆனால், புதுவை பெரியார் சிலை அருகே ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை தூக்கில் போட வலியுறுத்திய இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உருவ பொம்மையை போலீசாரின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்திய குடியரசு கட்சியினர் எரித்தனர்.












Click it and Unblock the Notifications