இடைக்காலத் தடை மிக மிக மகிழ்ச்சி தருகிறது- முருகன் மகள் அரித்ரா
Subscribe to Oneindia Tamil
லண்டன்: எனது தந்தை உள்ளிட்டோரின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக வந்த செய்தி எனக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றிகள் என்று கூறியுள்ளார் முருகனின் மகள் அரித்ரா.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த செய்தி எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இதற்காக பாடுபட்ட, போராடிய அனைவருக்கும் எனது மிகப் பெரிய நன்றிகள். மிக மிக மகிழ்ச்சியாக உள்ளேன்.
ராகுல் காந்தி, பிரியங்காவுக்கு இந்த உத்தரவு கடினமானதாக இருக்கும். ஆனால் எனது பெற்றோர் தவறு செய்யாதவர்கள், அவர்கள் அப்பாவிகள். இந்த உத்தரவு எனக்கு மிகப் பெரியது, மதிப்பு மிக்கது என்றார் அரித்ரா.












Click it and Unblock the Notifications