திருவண்ணாமலை, வேலூரில் லேசான நில நடுக்கம்: மக்கள் பீதி
வேலூர்: வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்றிரவு லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் நேற்றிரவு 9. 10 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இது சில வினாடிகள் நீடித்தது.
இந்த நில அதிர்வால் வீட்டில் உள்ள பொருட்கள் அசைந்தன, பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தன. இதைப் பார்த்த மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
கண்ணமங்கலத்தை அடுத்து உள்ள படவேடு, கொளத்தூரிலும் நில அதிர்வு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பள்ளி கொண்டா, கிருஷ்ணாபுரம், காலபுதூர் அணைக்கட்டு, அகரம்சேரி, மாதனூர், கொல்லமங்கலம், கூத்தம்பாக்கம், சின்னச்சேரி, பள்ளிக்குப்பம், வெட்டுவாணத்திலும் மக்கள் நில அதிர்வை உணர்ந்தனர்.
இந்த நில அதிர்வால் பீதியடைந்த மக்கள் நெடுநேரம் தூங்காமல் விழித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications