தூக்குத் தண்டனையை குறைக்கக் கோரி அமைச்சரவையிலும் தீர்மானம்- ராமதாஸ் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவருக்கும் கருணை காட்டி அதை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது போல அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி அதிலும் நிறைவேற்றிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது ராமதாஸ் கூறுகையில்,

தமிழக முதல்வரால் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை வரவேற்று அதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரைக் காப்பாற்ற முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் உடனடியாக அமைச்சரவையைக் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநரை சந்தித்து மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய அவரது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டுமென ஆளுநரை முதல்வர் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.

பின்னர் திருமாவளவன் கூறுகையில், தமிழக அரசின் இந்த தீர்மானத்தை வரவேற்று, பாராட்டி நன்றி தெரிவிக்கின்றோம். சென்னையில் நடைபெற உள்ள பேரணியில் இந்திய அளவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களை அழைக்க உள்ளோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+