மணல் பதுக்கிய தி.மு.க., மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பாண்டி கைது

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபும் அருகே மணல் பதுக்கிய தி.மு.க., மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள ஓ.கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. இவர் தி.மு.க., மாவட்ட தொண்டரணி அமைப்பாளராக உள்ளார். கோவிலாங்குளம், தோப்படைப்பட்டி ஆற்றில் இருந்து சுமார் 20 டன் மணலை, ஓ.கரிசல்குளம் கண்மாய் இரண்டாவது மடையில் இவர் பதுக்கி வைத்துள்ளார்.

இது குறித்து கமுதி டி.எஸ்.பி. சீனிவாச பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அந்த பகுதியில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கண்மாய் மடையில் மணல் பதுக்கி வைத்திருந்ததாக கண்டறிந்து, பாண்டியை பிடித்து கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் வாகைப் பாண்டியன் புகார் அளித்தார். அதன் பேரில் தி.மு.க., மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பாண்டியை, போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+