ரயில்களில் திருட்டுக்களை தடுக்க நவீன யுக்தி: தென் மண்டல ரயில்வே ஐ.ஜி. வினோத்குமார் டாக்கா
மதுரை: ரயில்களில் செயின் பறிப்பு மற்றும் திருட்டுக்களை தடுக்கும் வகையில், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில் பயணிகளை போன்று பயணித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பர் என, மண்டல ரயில்வே ஐ.ஜி.வினோத்குமார் டாக்கா தெரிவித்துள்ளார்.
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தென் மண்டல ஐ.ஜி. வினோத்குமார் டாக்கா ஆய்வு செய்த பின் அவர் கூறியதாவது, ரயில்களில் செயின் பறிப்பு மற்றும் திருட்டுக்களை தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில் பயணிகளை போன்று பயணித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ரயில்களில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அது குறித்து தகவல்களை கட்டுப்பாட்டு அறைகளுக்கும் போன் மூலம் தெரிவிக்காலம். இதில் வரும் புகார்களை கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள், அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு தெரிவித்து, நடவடிக்கை எடுப்பர்.
ரயில்வே பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் உட்பட பல பிரிவுகளில் 600 காலியிடங்கள் உள்ளன. விரைவில் அந்த காலியிடங்கள் நிரப்பப்படும். மதுரை ரயில்வே நிலையத்தில் 68 கண்காணிப்பு கேமிராக்கள், ஒரு பார்சல் ஸ்கேனர், 2 லக்கேஜ் ஸ்கேனர், 2 அன்டர்வெகிள் ஸ்கேனர் மூன்று மாதங்களுக்குள் நிறுவப்படும். பின்பு மற்ற நிலையங்களில் உள்ளது செயல்படும், என்றார்.












Click it and Unblock the Notifications