வருகிறது உள்ளாட்சித் தேர்தல் திருவிழா-பணிகள் தொடங்கின-10 நாளில் தேதி தெரியும்

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய பத்து மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள், 561 டவுன் பஞ்சாயத்துக்கள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இவற்றில், மேயர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் என மொத்தம் 14,379 பேரைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது.
இவை தவிர 29 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து யூனியன், 12,618 கிராம பஞ்சாயத்துக்களும் உள்ளன. இவற்றில் உள்ளன. இவற்றில் தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் என 1,17,716 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
இவர்களின் பதவிக்காலம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. தேர்தல் அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ளது. தேர்தலை தள்ளிப் போட முடியாது என்பதால் குறித்த காலத்தில் தேர்தல் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.
செப்டம்பர் 14ம் தேதிக்குப் பின்னர் தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்தத் தேர்தலில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.
வருகிற தேர்தலில் சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்குத் தேர்தல் நடைபெறும். பல்வேறு நகராட்சிகள், பஞ்சாயத்துக்கள் சென்னை மாநகராட்சியுடன் இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதால் இந்த மாற்றம். அதேபோல மதுரை, கோவை, திருப்பூர், திருச்சி, வேலூர், ஈரோடு, நெல்லை ஆகிய மாநகராட்சிகளிலும் வரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும்.
சேலம் மற்றும் தூத்துக்குடிக்கு மட்டும் பழைய வார்டுகளின் அடிப்படையிலேயே தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 10 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்பதால் அரசியல் கட்சிகளிடையே புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக என முக்கியக் கட்சிகள் அனைத்தும் இப்போதே தங்களது கட்சியினரிடம் விருப்ப மனுக்களைப் பெறத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications