உள்ளாட்சித் தேர்தலில் பாமகவுடன் கூட்டணி வைப்பது குறித்து நாளை முடிவு- திருமா.

உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம் வரவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் கட்சிகள் இறங்கி விட்டன. அனைத்துக் கட்சிகளுமே விருப்ப மனுக்களைப் பெற ஆரம்பித்துள்ளன.
வழக்கம் போல அதிமுக மற்றும் திமுக தலைமையில் இரு அணிகள் களத்தில் இறங்குகின்றன. அதேசமயம், இந்த தேர்தலில் திமுக, அதிமுகவுடன் சேராமல் தனி அணி அமைத்துப் போட்டியிடுவோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இக்கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளும் சேரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து திருமாவளவனிடம் கேட்டபோது, சென்னையில் நாளை கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என்றார்.
அதேசமயம், மதிமுகவும் தேர்தலி்ல கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது. இது பாமகவுடன் இணையுமா அல்லது நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றுடன் இணைந்து போட்டியிடுமா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications