பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டால் மகிழ்வேன்- கார்த்திகேயன்

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. நான் எனது கடமையை செய்தேன். தற்போது அரசாங்கம் தனது கடமையை செய்யட்டும். அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்படுமானால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினியின் தண்டனை ஏற்கனவே குறைக்கப்பட்டு இருப்பதால், தூக்கு தண்டனை பெற்ற மற்ற 3 கைதிகளும் தங்கள் தண்டனையை குறைக்க கோருவதற்கு உரிமை இருக்கிறது. மேலும் அவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனையை அனுபவித்திருக்கிறார்கள். அத்தோடு அவர்களின் கருணை மனு மீது முடிவு எடுக்க 11 ஆண்டு காலம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க அப்போது இருந்த சிபிஐ உயர் அதிகாரிகள், ஐபி உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகள் தயக்கம் காட்டி பின்வாங்கினர். இந்த நிலையில் விசாரணை நடத்த வேண்டும் என கார்த்திகேயனுக்கு சிபிஐ கோரிக்கை விடுத்தது. அப்போது அவர் சிஆர்பிஎப்பின் தலைவராக இருந்து வந்தார். அரசியல் குறுக்கீடு கூடாது, விசாரணையின்போது சித்திரவதை உள்ளிட்டவற்றை பிரயோகப்படுத்தக் கூடாது என்ற இரு நிபந்தனைகளின் பேரில் விசாரணைக்கு தலைமையேற்றார் கார்த்திகேயன். இதை அவரை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்ற தொணியில் அவர் கருத்து தெரிவித்திருப்பது அவர்களின் தண்டனைக் குறைப்புக்காக போராடி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு புது உற்சாகத்தை அளிக்கும் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications