தமிழக ஆளுநர் ரோசய்யா திருப்பதி விஜயம்- சாமி தரிசனம்
திருமலை: தமிழக ஆளுநர் ரோசய்யா, சாமி தரிசனம் செய்வதற்காக திருமலைக்கு புறப்பட்டு சென்றார்.
கடந்த மாதம் 31ம் தேதி, தமிழக ஆளுநராக ரோசய்யா பதவியேற்றார். இதையடுத்து சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் ஆளுநராக பதவியேற்றபின் முதல்முறையாக, திருமலையில் ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்கு சென்றுள்ளார்.
முன்னதாக, இன்று காலையில் சென்னையில் இருந்து குடும்பத்துடன் காரில் புறப்பட்ட ஆளுநர், காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலுக்கு சென்றார். அங்கு தரிசனத்தை முடித்த பின், பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சற்றுநேரம் ஒய்வெடுத்தார். கோவில் அதிகாரிகள் அவருக்கு பிரசாதம் வழங்கினர்.
அதன்பின் அங்கிருந்து திருமலைக்கு காரில் புறப்பட்டு சென்றார். இன்று மாலையில் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். தமிழக ஆளுநரின் வருகையை அடுத்து, திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தரிசனத்திற்கு பின், இன்று இரவு திருமலையில் தங்கும் ஆளுநர், நாளை குடும்பத்தினருடன் காரில் சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications