மூவர் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கோரி மெரீனா கடற்கரையில் காங். சாலை மறியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு உடனடியாக தண்டனையை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் மெரீனா கடற்கரை, காமராஜர் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு இன்றுகாலை இளைஞர் காங்கிரஸார் திரண்டனர். பின்னர் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜீவ் கொலையாளிகளை உடனடியாக தூக்கில் போட வேண்டும். அவர்களுக்குத் தண்டனையைக் குறைக்கக் கூடாது. கருணை காட்டக் கூடாது என்று கோரி அவர்கள் கோஷமிட்டனர்.

இவர்களது போராட்டத்தால் காமராஜர் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+