சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 200 போலீஸார் பலத்த பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil

டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாகவே அதிக அளவிலான போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பர். தற்போது இது அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் ஐந்து நுழைவாயில்கள் உள்ளன. இந்த ஐந்து வாயில்களுக்கும் தலா ஒரு இன்ஸ்பெக்டர் வீதம் தற்போது போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 25 சப் இன்ஸ்பெக்டர்கள், 125 போலீஸார் என மொத்தம் 200 பேர் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றத்திற்குள் நுழையும் அனைவரும் சோதனையிடப்பட்ட பின்னரே அனுப்பப்படுகின்றனர். அதேபோல உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளும் தீவிர வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மோப்ப நாய்களையும் பயன்படுத்தி சோதனை நடத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications